search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேமுதிக ஆர்ப்பாட்டம்"

    சொத்துவரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    சொத்துவரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் மகாதேவன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுபோல பம்மல் நகராட்சி முன்பு நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில தொண்டரணி துணைச் செயலர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும். அமைதி பேரணியில்  பங்கேற்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். 

    இச்சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று தமிழக முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், நகரச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் கணபதி, மாவட்ட பொருளாளர் கண்ணுசாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், துரை, சிவா ,ஐயப்பன், பொன். சாமிதுரை, மலர்மன்னன், மாவட்ட துணைச்செயலாளர்கள் சுடர்செல்வன், சங்கர், மேகலா ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×